- திமுக
- கஸ்தூரி
- இந்து மக்கள் கட்சி
- 2024 நாடாளுமன்றத் தேர்தல்கள்
- கோவை சிட்டாபுதூர் வி.கே.கே
- மேனன் சாலை
- பாஜக
இந்து மக்கள் கட்சி சார்பில், 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பிரசார துவக்கவிழா கோவை சித்தாபுதூர் வி.கே.ேக. மேனன் சாலையில் நேற்று இரவு நடந்தது. இதில், பாஜ ஆதரவாளர் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசுவதாக இருந்தது. ஆனால் அவர் வர தாமதமானது. இரவு 10 மணிக்குமேல் நடிகை கஸ்தூரி அங்கு வந்ததால் அவர் மேடையில் பேசவில்லை. நிருபர்களுக்கு மட்டும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அரசியல் சூழ்நிலை ஏற்ற, இறக்கம் இல்லாமல் ஒரே சீராகத்தான் உள்ளது. திமுகவில் தொகுதி பங்கீடு முடிந்துவிட்டது. மற்ற கட்சிகள் இன்னும் துவங்கவில்லை. வரும் 18ம் தேதிக்குள் மற்ற கட்சிகள் முடிவுகளை எடுக்க வேண்டும். இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்கு காரணம் திமுக வலுவாக உள்ளது. திமுகவை எதிர்க்கும் அளவுக்கான எதிர்க்கட்சி இல்லை. திமுகவை தோற்கடிக்கும் தேர்தலாக இது இருக்காது. திமுகவுக்கு அடுத்து யார்? என்ற கேள்விக்கான பதிலாக இருக்கும்.
ஜெயலலிதா இருந்தபோது அந்த மோடியா? இல்லை இந்த லேடியா? என்று கூறி வெற்றி பெற்றார். ஆனால், இன்று அந்த நிலைமையில் அதிமுக இல்லை. இதை நான் புள்ளி விவரங்களுடன் கூறுகிறேன். பீகாரில் தற்போது தொகுதி பங்கீடு சரியாக நடைபெறவில்லை. அரசியலில் நல்ல அனுபவமும், ஆர்வமும், ஓரளவிற்கு அரசியல் பார்வை உள்ளவர்கள் அரசியலை கண்டிப்பாக பேச வேண்டும். திமுகவினர் மிகவும் கட்டுக்கோப்பாக உள்ளனர். அவர்கள் எந்த ஒரு தவறான முன்னெடுப்பும் இதுவரை எடுத்து வைக்கவில்லை. இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெறும். இவ்வாறு நடிகை கஸ்தூரி கூறினார்.
The post திமுகவுக்குதான் வெற்றி தோற்கடிக்க முடியாது: நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.